News September 30, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய ஊராட்சிகள் இணைப்பு

image

தமிழ்நாடு அரசு கிராம ஊராட்சிகளின் பதவி காலம் முடிந்தவுடன் நகர்புற உள்ளாட்சிகளுக்கு அருகில் உள்ள கிராம உள்ளாட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புடன் இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் நகராட்சியுடன் 10 ஊராட்சிகள் இணைய உள்ளது. சேலை,காக்களூர்,ஈக்காடு,தலக்கஞ்சேரி,புட்லூர்,திருப்பாச்சூர் பகுதி,வெங்கத்தூர்,மேல் நல்லாத்தூர்,தண்ணீர் குளம், சிறுவானூர் ஆகிய ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது.

Similar News

News September 11, 2025

திருத்தணி வந்த நடிகை ரோஜா

image

ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், திரைப்பட நடிகை ஆர்.கே.ரோஜா திருத்தணி ஜாத்திரை திருவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின் பக்தர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினார். மேலும், அங்கிருந்தவர்கள் நடிகை ரோஜாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

News September 11, 2025

திருவள்ளூரை வெளுக்க வரும் மழை

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று(செப்.11) காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியே செல்லும் போது குடையுடன் செல்லுங்கள்.

News September 11, 2025

திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் (செப் 12) அன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு திருவள்ளுர், திருத்தணி மற்றும் பொன்னேரி ஆகிய வருவாய் கோட்ட அலுவலகங்களில் சார் ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்கள் தலைமையில் நடத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் திரு. மு. பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!