News October 25, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் விவரங்களுக்கு

திருவள்ளூர் மாவட்டத்தில் (அக்.24) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
பூந்தமல்லி அருகே சிறுவன் பரிதாப சாவு!

திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி. இவரது க்மகன் சந்தீப்(14). நேற்று முன் தினம் பள்ளி விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வெளியே சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரில் போலீசார் தேடி வந்தனர். அப்போது, போரூர் ஏரியில் சந்தீப் சடலமாக மீட்கப்பட்டார். தனது நண்பர்களுடன் ஏரியில் குளித்த போது, நீரில் மூழ்கி இறந்தது விசாரணையில் தெரிய வந்தது.
News February 17, 2026
அவடி: 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர்: ஆவடி அருகே கடந்த 2024-ம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பாடி பகுதியைச் சேர்ந்த (27) வயதான மகத் என்பவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.16) மகத் மீது குற்றம் நிரூபணம் ஆனதால் அவருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
News February 17, 2026
திருவள்ளூரில் கொடூர கொலை!

திருநின்றவூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முகேந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் கத்தியால் தாக்கியதில் முகேந்திரன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், ஒரு வருடத்திற்கு முன்பு ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை சம்பவத்தில் ஈடுபட்ட விக்னேஷ் மற்றும் ரவிசங்கர் இருவரையும் கைது செய்தனர்.


