News October 29, 2025
திருவள்ளூர்: மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தை பலி

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர்- சுகன்யா தம்பதி. இவர்களின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
Similar News
News October 29, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதில் கும்மிடிப்பூண்டியில் அதிகபட்சமாக 33 மிமீ, பொன்னேரி 26 மிமீ, ஆவடி 31 மிமீ, திருத்தணி 23 மிமீ, பூண்டி 22 மிமீ, திருவள்ளூர் 20 மிமீ, தாமரைப்பாக்கம் 23 மிமீ, சோழவரம் 19 மிமீ, திருவாலங்காடு 18 மிமீ, ஊத்துக்கோட்டை 14 மிமீ, பூந்தமல்லியில் 11 மிமீ மற்றும் ஆர்.கே. பேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய பகுதிகளில் லேசான மழை பதிவாகியுள்ளது.
News October 29, 2025
திருவள்ளூர்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

திருவள்ளூர் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள்<
News October 29, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 21.67 மி.மீ. மழை

திருவள்ளூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 28.10.2025 காலை 6.00 மணி முதல் 29.10.2025 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 33 மி.மீ., ஆவடியில் 31 மி.மீ., பொன்னேரியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 21.67 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


