News February 7, 2026
திருவள்ளூர்: போஸ்ட் ஆபீஸில் 2019 காலியிடங்கள்! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2019 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News February 7, 2026
JUST IN: திருவள்ளூரில் புதுமணப் பெண் மர்ம மரணம்!

பொன்னேரி அருகே பெரும்பேடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் மனைவி கௌசல்யா மர்மமான முறையில் உயிரிழந்தார். வீட்டில் தவறி விழுந்ததாக மருத்துவமனைக்கு ராஜேஷ் அழைத்துச் சென்ற போது அவர் இறந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில், கணவர் ராஜேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இருவருக்கும் திருமணமாகி 5 மாதங்களே நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
News February 7, 2026
திருவள்ளூரில் இன்று மின் தடை!

திருவள்ளூர் துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக திருவள்ளூர் ஜே.என் சாலையில் ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி., வரை, பூங்கா நகர், ஐ.ஆர்.என் பின்புறம், புரங்கத்தூர்,போலிவாக்கம், மணவாள நகர், பட்டரை, சேலை, ஏகாட்டூர், அதிகத்தூர், வெங்கத்தூர், மேல்நல்லாத்தூர், மற்றும் கீழ்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் இன்று (பிப்.7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 7, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு முதல் இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


