News June 1, 2024

திருவள்ளூர்: போலி ஆவணங்கள் மூலம் நில மோசடி

image

அம்பத்தூர் அருகே புத்தகரம் பகுதியில் அருணா (63) என்பவருக்கு ரூ.75 லட்சம் மதிப்பிலான 1800 சதுர அடி நிலம் உள்ளது. இந்த நிலத்தை புத்தகரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த இனியன் (34) என்பவர் போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். புகாரின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இனியன் என்பவரை நேற்று கைது செய்தனர்.

Similar News

News July 7, 2025

திருவள்ளூர் உழவர் சந்தையின் விலை நிலவரம்

image

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 07) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.30, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.45, அவரைக்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.55, கத்திரிக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது

News July 7, 2025

திருவள்ளூரில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை9ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 7, 2025

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!