News September 8, 2024
திருவள்ளூர்: புயல் எச்சரிகைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் கொண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, எண்ணூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜயவாடாவில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மக்கள் தவித்து வரும் நிலையில் தொடர்ச்சியாக தமிழகத்திலும் மழை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 10, 2025
திருவள்ளுர்: தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் சந்திப்பில்ரயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வரும் தனுஷ்நாத் என்பவர் கடந்த 7ம் தேதி பணியில் இருந்த போது, 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து மூளை சாவு அடைந்தார். இதையடுத்து குடும்பத்தினர் ஒப்புதலின்படி, அவரது சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரல், கருவிழிகள் மற்றும் இதய வால்வுகள் தானமாக வழங்கப்பட்டன.
News September 10, 2025
திருவள்ளூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)
News September 10, 2025
திருவள்ளூர்: லைசென்ஸ் இருக்கா? இதை பண்ணுங்க!

▶️லைசென்ஸை மொபைல் எண்ணை இணைக்க https://parivahan.gov.in/ என்ற வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும்
▶️அங்கு,உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, ஓட்டுநர் உரிமம் தொடர்பான சேவைகளில் ‘Update Mobile Number’ என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்
▶️பின்னர் ஓட்டுநர் உரிம எண்,பிறந்த தேதி போன்ற போன்ற விவரங்களை உள்ளிட்டு, மொபைல் எண்ணைப் பதிவு செய்து கொள்ளலாம்
▶️அனைவருக்கும் இதை SHARE பண்ணுங்க!