News November 4, 2025
திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
Similar News
News November 4, 2025
திருவள்ளூர்: தீராத கடன் எல்லாம் தீர இங்க போங்க!

திருவள்ளூர், சத்தரையில் அமைந்துள்ளது கருமாணிக்கப் பெருமாள். சுமார் 600 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், கருமாணிக்கப் பெருமாள், லக்ஷ்மி நரசிம்மர், ஆண்டாள் ஆகியோர் உள்ளனர். இந்த கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிப்பட்டால் மட்டும் போதுமாம். எவ்வளவு பெரிய தீராத கடனும் தீர்ந்து போகும் என பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. தீராத கடனில் சிக்கியவர்களுக்கு பகிரவும்.
News November 4, 2025
திருவள்ளூர்: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

திருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 4, 2025
திருவள்ளூர்: நீரில் மூழ்கி குழந்தைகள் பலி; உதவிய CM

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட அயனம்பாக்கத்தில் கடந்த வாரம் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகள் ரியாஸ் மற்றும் ரிஸ்வான் ஆகியோரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் இன்று (நவ.4), ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினார். இந்த நிகழ்வின் போது மாவட்ட ஆட்சியர் உடன் இருந்தனர்.


