News July 12, 2024
திருவள்ளூர்: துறைவாரியாக நலத்திட்டம் வழங்கிய அமைச்சர்

திருவள்ளூர் மாவட்டம் கே.ஜி.கண்டிகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அமைச்சர் காந்தி, கலெக்டர் பிரபுசங்கர், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். பின்னர் மனு வழங்கிய பயனாளிகளுக்கு உடனடி தீர்வு கண்டு அதற்கான ஆணைகளை வழங்கினார். மேலும், துறை வாரியாக பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதில் டிஆர்ஓ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Similar News
News July 9, 2025
திருவள்ளூரில் 151 காலிப்பணியிடங்கள்

தமிழகத்தில் 2229 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், திருவள்ளூரில் மட்டும் 151 பணியிடங்கள் உள்ளன. 10th-ல் தேர்ச்சி/ தோல்வியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் பெறலாம். 10 ஆண்டுகளுக்கு பின் VAO-வாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆக.,4-க்குள் விண்ணப்பிக்கலாம். தகவலுக்கு (044-27660250)தொடர்பு கொள்ளவும். ஷேர் பண்ணுங்க <<17002046>>தொடர்ச்சி<<>>
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
▶️மேலும் தகவலுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் / உங்கள் பகுதி தாலுகா அலுவலகத்தை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!
News July 9, 2025
வினோதமான பழவேற்காடு கல்லறை

வினோதமான மண்டைஓடு சிலைகளோடு இந்தியாவில் ஐரோப்பிய காலனித்துவத்திற்கு சாட்சியாக உள்ளது பழவேற்காடு டச்சு கல்லறை. இந்தியாவில் குடியேறிய டச்சுக்காரர்களின் உடல்கள் இதில் புதைக்கப்பட்டுள்ளது. இவர்களில் டச்சு அதிகாரிகள், வணிகர்கள், வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்,பிற முக்கியஸ்தர்கள் அடங்குவர். இங்கு மொத்தம் 76 கல்லறைகள் உள்ளன. இதன் அருகே இவர்கள் கட்டிய கோட்டையும் உள்ளது. ஷேர் பண்ணுங்க