News May 21, 2024
திருவள்ளூர்: தந்தையை குத்திக் கொன்ற மகன்

பூந்தமல்லி அருகே திருமழிசையைச் சேர்ந்தவர் பாபு (49), தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி தேவி. இவர்களது மகன் தமிழரசன் (24). நேற்றிரவு பாபு வேலை முடித்து குடிபோதையில் வீட்டுக்கு வந்ததை, மனைவி தேவி கண்டித்துள்ளார். அப்போது பாபு அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதால், கோபம் அடைந்த மகன் தமிழரசன் கத்தியால் பாபுவை குத்திக் கொலை செய்தார். வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிந்து தமிழரசனை இன்று காலை கைது செய்தனர்.
Similar News
News November 21, 2025
திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 21, 2025
திருவள்ளூர்: கரண்ட் பில் குறைக்க எளிய வழி! CLICK NOW

திருவள்ளூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News November 21, 2025
அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவத்தில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் (நவ-22,23) ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது என அறிவித்துள்ளார்.


