News October 15, 2025
திருவள்ளூர்: சிறுமியை சீரழித்த மனித மிருகத்திற்கு தண்டனை!

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியைச் சேர்ந்த அன்பழகன்(30). இவர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் 22ம் தேதி தனது வீட்டின் அருகே 16 வயது சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கினார். இந்த வழக்கில் குற்றவாளி அன்பழகனுக்கு 28 ½ ஆண்டு சிறை தண்டனை, 28 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பு வழங்கினார்.
Similar News
News October 29, 2025
திருவள்ளூர் மாவட்டத்தில் சராசரியாக 21.67 மி.மீ. மழை

திருவள்ளூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு வெளியிட்ட தகவலின்படி, 28.10.2025 காலை 6.00 மணி முதல் 29.10.2025 காலை 6.00 மணி வரை மாவட்டம் முழுவதும் மிதமான மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 33 மி.மீ., ஆவடியில் 31 மி.மீ., பொன்னேரியில் 26 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 21.67 மி.மீ. மழை பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News October 29, 2025
திருவள்ளூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
திருவள்ளூர்: மர்ம காய்ச்சலால் 1 வயது குழந்தை பலி

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர்- சுகன்யா தம்பதி. இவர்களின் 1 வயது மகள் அனன்யாவிற்கு ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. பெற்றோர் அருகில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி கொடுத்தபோது, காய்ச்சல் சரியானது. திடீரென குழந்தைக்கு காய்ச்சல் அதிகரிக்கவே ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.


