News September 19, 2025
திருவள்ளூர்: சிறுமியை சீரழித்த தந்தைக்கு அதிரடி தீர்ப்பு

ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறுமியின் தந்தை ரமேஷ் என்பவரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்து வந்தநிலையில் நேற்று 18.09.2025 வழக்கு விசாரணை முடிந்து அவருக்கு 21 ஆண்டு கால கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் ரூ.30,000அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
Similar News
News March 9, 2026
திருவள்ளூர்: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க இங்கு <
News March 9, 2026
திருவள்ளூரில் 250 கோழிகள் இலவசம்!

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு

திருவாலங்காடில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025 – 26ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகள், கடந்தாண்டு அக்.27ஆம் தேதி தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட கரும்பு அரவை இலக்கான 2 லட்சம் டன்களில், கடந்த 2ஆம் தேதி வரை, 1.86 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்து வரும் விவசாயிகள் நாளைக்குள் கரும்பை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


