News March 28, 2024

திருவள்ளூர்: கொலை… நாயால் சிக்கிய குற்றவாளி!

image

பொன்னேரி அடுத்த கனகவல்லிபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த சரஸ்வதி (55) என்பவரை மர்ம நபர் கத்தியால் வெட்டி கொலை செய்து கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்த நிலையில், பொன்னேரி போலீசார் கொலையாளியை தேடி வந்தனர்.  இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான அசோக் (35) என்பவர் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கண்டுபிடித்தது போலீஸ் மோப்ப நாய் டாபி என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2025

மப்பேடு ஏரியில் மூழ்கி முதியவர் பலி

image

மப்பேடு, கீழச்சேரியைச் சேர்ந்த சின்னபையன் (60), கடந்த 6ஆம் தேதி நரசமங்களம் பெரிய ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். ஆனால், வீடு திரும்பவில்லை. மறுநாள் (ஏப்ரல் 7) உறவினர்கள் ஏரிக்கு சென்று தேடியபோது, சின்னபையன் ஏரியின் மதகு பகுதியில் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். மப்பேடு போலீசார் உடலை கைப்பற்றி, திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

News April 9, 2025

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கொடூரம்

image

திருவள்ளூரில், பள்ளித் தோழியிடம் ஆசை வார்த்தை பேசி வீட்டிற்கு வரவழைத்து நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கள்ளக்காதலியுடன் கூட்டு சேர்ந்து அப்பாவி பெண்ணிடம் நகைப்பறிக்க திட்டமிட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கணவனை பிரிந்து காதலன் ஜெயந்தன் உடன் சேர்ந்து ஹேமலதா என்பவர் இந்த கொடூர சம்பவத்தை நிகழ்ச்சியுள்ளனர். ஹேமலதா தலைமறைவாகியுள்ளார்.

News April 8, 2025

வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக, தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில், முதன்மையான மொழியான தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும். வரும் மே 1ஆம் தேதிக்குள் இந்த இதனை செய்ய வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. ஆட்சியர் மு. பிரதாப் அறிவித்ததின்படி, தவறினால் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் கூறினார்.

error: Content is protected !!