News December 21, 2025
திருவள்ளூர்: குழந்தையின் எதிர்காலத்திற்கு ரூ.1000 போதும்!

உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான் வாத்சல்யா திட்டம். இந்த திட்டத்தின் மூலம், 18 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 முதலீடு செய்து வந்தால், மொத்த தொகை ரூ.8,48,000 வரை கிடைக்கும். குழந்தைகள் வளர்ந்த உடன் இந்த தொகையை அவர்களது கல்வி செலவுக்காக பயன்படுத்தலாம். <
Similar News
News December 22, 2025
திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி வாலிபர் துடிதுடித்து பலி!

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் யாகூப்(23). இவர், கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நண்பர்களோடு ஏரியில் குளிக்கச் சென்றபோது வலிப்பு ஏற்பட்டு, மூழ்கி உயிரிழந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கவரைப்பேட்டை போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.
News December 22, 2025
திருவள்ளூர்: அண்ணியை கத்தியால் குத்திக் கொலை!

இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி சாந்தி(26). இளையராஜாவின் தம்பி இசைமேகம். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், சாந்தி இவரைக் கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இசைமேகம் சாந்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், சாந்தி உயிரிழந்தார், போலீசார் இசமேத்தை தேடி வருகின்றனர்.


