News January 7, 2026
திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

திருவள்ளூர்: பொங்கல் பரிசுத் தொகுபு வரும் ஜன.8ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும். டோக்கன் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நாட்களில் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான புகார் ஏதேனும் இருந்தால் 7338749105 என்ற எண்ணை அழைக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
திருவள்ளூரில் 250 கோழிகள் இலவசம்!

திருவள்ளூர் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News March 9, 2026
திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கவனத்திற்கு

திருவாலங்காடில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 2025 – 26ஆம் ஆண்டிற்கான கரும்பு அரவைப் பணிகள், கடந்தாண்டு அக்.27ஆம் தேதி தொடங்கி, நிர்ணயிக்கப்பட்ட கரும்பு அரவை இலக்கான 2 லட்சம் டன்களில், கடந்த 2ஆம் தேதி வரை, 1.86 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை செய்து வரும் விவசாயிகள் நாளைக்குள் கரும்பை ஆலைக்கு அனுப்ப வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 9, 2026
திருவள்ளூர்: 3.53 லட்சம் பெண்களுக்கு உரிமைத் தொகை

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், 2023ஆம் ஆண்டு தொடங்கியது. ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு தகுதி வாய்ந்த மகளிர், மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகாக்களில், 3 லட்சத்து 53,858 பெண்கள், இத்திட்டத்தில் பயனடைந்து வருகின்றனர் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


