News October 14, 2025

திருவள்ளூர்: ஏரியில் மூழ்கி போக்குவரத்து ஊழியர் பலி

image

செங்குன்றம் அடுத்த அப்துல் மரக்காயர் தெருவைச் சேர்ந்தவர் முகமது யாசின் (39). இவர், சென்னை பல்லவன் இல்லத்தில் அமைந்துள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தணிக்கையாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை புழல் ஏரியில் நீச்சல் கற்றுக்கொள்வதற்காக நண்பருடன் சென்ற முகமது யாசின், நீச்சல் கற்றுக்கொண்டிருந்த போது, திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி பலியானார்.

Similar News

News October 14, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் நிரந்தர வேலை; இன்றே கடைசி!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து இன்று அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 14, 2025

திருவள்ளூர்: கல்லூரி விடுதி உணவில் புழு, பூச்சி!

image

ஆவடியில் தனியார் கல்லூரியில் உள்ள விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதியில் வழங்கப்படும் உணவில் புழு, பூச்சிகள் இருப்பதாகவும் அதுபற்றி கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 14, 2025

திருவள்ளூரில் 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!