News September 4, 2025

திருவள்ளூர்: உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை.

image

மோரையைச் சேர்ந்த டி.செல்லப்பன் என்பவர் உடல் உறுப்புகளைத் தானம் செய்ததால், அவருக்கு அரசு மரியையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு, தமிழக அரசின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தினர்.

Similar News

News September 5, 2025

திருவள்ளூர்: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

image

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-th-tn@nic.in, thiruvallur.dcdrf@gmail.com என்ற இ-மெயிலில் (அ) மாவட்ட நுகர்வோர் மன்றம் 1-டி,சி.வி நாய்டு சாலை, 1-வது தெரு, திருவள்ளூர் (044-27664823) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618027>>தொடர்ச்சி<<>>

News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

News September 5, 2025

திருவள்ளூர்: நாதஸ்வர கலைஞராக வாய்ப்பு

image

திருத்தணி முருகன் கோயிலில் நாதஸ்வர பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த பயிற்சி பள்ளியில் 2025& 26 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது விருப்பமுள்ளவர்கள் www.tiruttanimurugan.hrce.gov.in வலைதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!