News November 20, 2025

திருவள்ளூர்: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

திருவள்ளூர் மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

Similar News

News November 21, 2025

திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

திருவள்ளூர்: கரண்ட் பில் குறைக்க எளிய வழி! CLICK NOW

image

திருவள்ளூரில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன் <<>>மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News November 21, 2025

அறிவித்தார் திருவள்ளூர் கலெக்டர்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்.ஐ.ஆர் கணக்கெடுப்பு படிவத்தில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் (நவ-22,23) ஆகிய நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உதவி மையங்கள் செயல்பட உள்ளது என அறிவித்துள்ளார்.

error: Content is protected !!