News February 15, 2026
திருவள்ளூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று (பிப்.14) இரவு முதல் இன்று (பிப்.15) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 18, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

கடம்பத்தூர் ஒன்றியம் நுங்கம்பாக்கம் கம்மவார் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(35). இவருக்கு கீர்த்தனா(28) என்ற மனைவியும் 4 வயதில் ஓர் பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன் தினம் குளிக்கச் சென்ற போது, தவறி விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News February 18, 2026
திருவள்ளூரில் தூக்கிட்டு தற்கொலை!

கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் பாலாஜி(25). இவர், அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்.15ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த பாலாஜி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் மேனகா இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 18, 2026
திருவள்ளூர்: கஞ்சா கடத்தியவர்கள் அதிரடி கைது

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே, நேற்று (பிப்.17) செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் பாலவாக்கம் சோதனை சாவடியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்தபோது, ஆந்திராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு கிலோ கஞ்சா கடத்தி இருவர் கைது, விசாரணையில் வியாசர்பாடியைச் சேர்ந்த சையத் முஷரப் சுகுமார் ஆகியோரை காவல்துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.


