News January 31, 2026
திருவள்ளூர்: இங்கு சென்றால் திருமணம் நிச்சயம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., அரக்கோணம் செல்லும் வழியில் உள்ள திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் சமேத வசீஸ்வரர் கோயில் உள்ளது. வெகு நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், இங்குள்ள தங்காதலி தேவியை வழிபட்டால் தடை நீங்கி உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. காலை: 6:00 – 12:00, மாலை 4:00 – இரவு 8:00 மணி வரை நடை திறக்கும். கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து பஸ், ஷேர் ஆட்டோவில் இங்கு செல்லலாம்.( SHARE IT)
Similar News
News February 4, 2026
திருவள்ளூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருவள்ளூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..?

திருவள்ளூர்,:பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (பிப்.5), காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். எனவே திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 4, 2026
திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில்<
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.


