News May 29, 2024
திருவள்ளூர்: ஆவின் பால் மாயம்

ஆவடி அருகே பட்டாபிராம் காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் நடத்தி வருபவர் மலர்விழி (58) . நேற்று அதிகாலை வழக்கம்போல் பிளாஸ்டிக் டிரேயில் ஆவின் பால் பாக்கெட்டுகள், இவரது சங்கம் அருகே இறக்கி வைக்கப்பட்டுள்ளன. காலை மலர்விழி கடைக்கு சென்று பார்த்தபோது 4 டிரேயில் இருந்த 50 ஆரஞ்சு பால் பாக்கெட்டுகள் திருடு போயிருந்தன. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News July 7, 2025
திருவள்ளூர் உழவர் சந்தையின் விலை நிலவரம்

திருவள்ளூர் உழவர் சந்தையின் இன்று (ஜூலை 07) காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (1 கிலோ) தக்காளி ரூ.35, உருளை ரூ.30, பீர்க்கங்காய் ரூ.45, புடலங்காய் ரூ.45, அவரைக்காய் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, சுரைக்காய் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30, பாகற்காய் ரூ.55, கத்திரிக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.50, வாழைப்பழம் ரூ.45, தேங்காய் ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டது
News July 7, 2025
திருவள்ளூரில் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி – ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை9ம் தேதி நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும், திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News July 7, 2025
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலன்துறை உள்ளிட்ட 10 துறைகள் தொடர்பான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகைகள், செயல்படுத்தப்பட்டத் திட்டங்கள் மற்றும் தற்போதைய நிலை குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2026-ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் காந்திராஜன் தலைமையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (ஜூலை 7) முற்பகல் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்