News May 7, 2024

திருவள்ளூர் அருகே 7 பேர் அதிரடி கைது

image

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்வதாக நசரத்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போதை ஊசிகள், கஞ்சா விற்பனை செய்த செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (29), சந்தோஷ் (21), தூத்துக்குடியைச் சேர்ந்த அமிர்தலிங்கம் (21), சூர்யா (21) மற்றும் 17 வயதுடைய 3 சிறுவர்களை நேற்று (மே 6) அதிரடியாக கைதுசெய்தனர்.

Similar News

News July 6, 2025

திருவள்ளூர் இறைச்சி மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மார்கெட்டில் இன்று இறைச்சி விலை நிலவரம் (கிலோவில்): எலும்பில்லாத நாட்டு கோழி கிலோ ரூ.450, கோழிக்கறி கிலோ ரூ.240, ஆட்டு இறைச்சி கிலோ ரூபாய். 850, ஆட்டுத்தலை ரூபாய் 300, நாலு ஆட்டுக்கால்கள் ரூபாய் 400, மூளை ரூ.120, மண்ணீரல் ரூபாய் 200. பொன்னேரியில் சிக்கன் விலை கிலோ ரூபாய் 200 -க்கு விற்கப்படுகிறது.

News July 6, 2025

திருவள்ளூர் மீன் மார்க்கெட் விலை நிலவரம்

image

திருவள்ளூர் மின் நிலவரம் (கிலோவில்) : வஞ்சிரம் மீன் ரூ.900-1000, பண்ண மீன் கிலோ ரூ.300-350, பாறை மீன் கிலோ ரூபாய்.200-300, இறால் (சிறியது) கிலோ ரூபாய்.200, (பெரியது) ரூபாய்.300-500, நண்டு கிலோ ரூபாய்.200-300, பெரிய நண்டு ரூ.400-800, சங்கரா மீன் கிலோ ரூ.400-450, பாறை மீன் கிலோ ரூ. 200-250, மத்தி மீன் கிலோ ரூ.60, ஊடான் மீன் ரூ.300, ஏரி மடவைர ரூ.200, கட்லா ரூ.200-250, ஏரிக்கண்டை ரூ.200 க்கு விற்பனை

News July 6, 2025

திருவள்ளூர் மாவட்ட இளைஞர் ஒடிசா மாநிலத்தில் கொலை

image

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் சட்ட விரோதமாக கஞ்சா கொள்முதலுக்காக ஒடிஷா மாநிலம் சென்றுள்ளார். அவரை பிடித்து வைத்து, 5 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய கும்பல், அவரை கொலை செய்து, பிணத்தை வீசிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடத்தல் கும்பல் பணம் கேட்டு மிரட்டுவது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியடைந்த மக்கள் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்

error: Content is protected !!