News May 2, 2024
திருவள்ளூர் அருகே ஆட்சியர் ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியிலுள்ள வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தை திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் அவர்கள் இன்று (02.05.2024 ) பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் துறை சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.
Similar News
News August 25, 2025
BREAKING- திருவள்ளுர்: மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

பூவிருந்தவல்லி சொன்னீர்குப்பத்தில் விநாயகர் சிலைக்கு பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து பரத் என்பவர் உயிரிழந்துள்ளார். அதே போல் சென்னையில் விநாயகர் சிலை அமைக்க பந்தல் அமைக்கும் போது மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாதவரத்தில் பந்தல் அமைக்கும் போது பிரசாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் அந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களில் உஷாரா இருங்க.
News August 25, 2025
BREAKING- திருவள்ளூர்: 1வயது குழந்தை பரிதாப பலி

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அருகே இன்று 1வயது குழந்தை விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது தரையில் இருந்த வண்டை விழுங்கியதால் மூச்சுக்குழாயில் வண்டு கடித்து குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியள்ளது. மேலும் சடலத்தை கைப்பற்றி வெங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தைகள் விளையாடும் போது பெற்றோர்கள் யாரேனும் உடன் இருக்க போலீஸ் அறிவுரை வழங்குகின்றனர்.
News August 25, 2025
திருவள்ளூர் சந்தையில் விலை நிலவரம்

திருவள்ளூர் இன்று காய்கறி, பழ விலை: வெங்காயம் ரூ.33–37, தக்காளி ரூ.61–67, பச்சைமிளகாய் ரூ.54–60, உருளைக்கிழங்கு ரூ.33–37, கேரட் ரூ.45–50, முட்டைகோஸ் ரூ.30–33, காலிஃபிளவர் ரூ.31–34, கத்திரிக்காய் ரூ.39–43, முருங்கைக்காய் ரூ.69–76. பழங்களில் ஆப்பிள் வாஷிங்டன் ரூ.276–305, சிம்லா ரூ.155–171, வாழை ரூ.69–76, மாம்பழம் ரூ.49–55, ஆரஞ்சு ரூ.63–70, திராட்சை ரூ.121–133, மாதுளை ரூ.132–146, பப்பாளி ரூ.36–39.