News December 22, 2025

திருவள்ளூர்: அண்ணியை கத்தியால் குத்திக் கொலை!

image

இருளஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவரின் மனைவி சாந்தி(26). இளையராஜாவின் தம்பி இசைமேகம். இவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், சாந்தி இவரைக் கிண்டல் செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இசைமேகம் சாந்தியை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், சாந்தி உயிரிழந்தார், போலீசார் இசமேத்தை தேடி வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

திருவள்ளூர்: ’நான் செத்துவிட்டேனா?’ – எம்.எல்.ஏ ஆத்திரம்

image

புதுமாவிலங்கை கிராமத்தில் அமைச்சர் நாசர் கலந்து கொண்ட, நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சியில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி ராஜேந்திரன் கோபித்து கொண்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நன்றி உரையின் போது, பெயரை அதிகாரிகள் கூறவில்லை என கோபமடைந்து புறப்பட்டு சென்றார். மேலும் ’நான் வருவதற்கு முன்பே ஓபன் பண்ணா எப்படி? நான் செத்துட்டேன்னு நினைத்தீர்களா?’ என ஆட்சியரிடம் கோபப்பட்டு சென்றார்.

News December 29, 2025

பிரவீன் சக்ரவர்த்திக்கு சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு

image

உ.பி.யை விட அதிக கடன் வாங்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறிய கருத்துக்கு காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் ‘கடனளவை மட்டுமே வைத்து ஒரு மாநிலத்தை மதிப்பிடுவது என்பது வெறும் உடல் எடையை வைத்து ஒருவரின் உடற்தகுதியை தீர்மானிப்பது போன்றதாகும்’ என தெரிவித்துள்ளார்.

News December 29, 2025

திருவள்ளூரில் இனி வீட்டு வரி செலுத்துவது ஈஸி!

image

திருவள்ளூர் மக்களே! வீட்டு வரி செலுத்தவோ (அ) ரசீது பெறவோ அரசு அலுவலகம் சென்று காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக தமிழக அரசு புதிய இணையதளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. <>இந்த இணையதளம் <<>>மூலம் நீங்கள் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தலாம். மேலும், ரசீதையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் செய்யவும்

error: Content is protected !!