News December 5, 2025
திருவள்ளூரில் 3.89 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?

தமிழகத்தில் டிச.16-ம் தேதியுடன் நிறைவடையும் எஸ்ஐஆர் பணியில் 77.52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படவாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட அளவில் அதிகபட்சமாக சென்னையில் 10.40 லட்சம் பேர் (இறந்தவர்கள் மட்டும் 1.49 லட்சம்) பேர் நீக்கப்படலாம். திருவள்ளூர் மாவட்டத்தில் 3.89 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 5, 2025
திருவள்ளூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
திருவள்ளூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், இங்கு <
News December 5, 2025
ஆக்கிரமிப்பால் நிரம்பாத ஏரிகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்தும், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 574 ஏரிகளில், 182 ஏரிகள் மட்டுமே முழு கொள்ளளவை எட்டி உள்ளன. ஆக்கிரமிப்பு, வரத்து கால்வாய் சீரமைக்காதது போன்ற காரணங்களால், மீதம் உள்ள ஏரிகள் நிரம்பாதது, விவசாயிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி உள்ளது. மழை பெய்தாலும், ஆக்கிரமிப்பு காரணமாக, அனைத்து ஏரிகளும் 100 சதவீதம் நிரம்புவதற்கு வாய்ப்பில்லை.


