News March 21, 2024

திருவள்ளூரில் முதல் நாள் மனு தாக்கல் இல்லை

image

லோக்சபா தேர்தல் ஏப்.19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய நேற்று முதல் மார்ச் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் முதல் நாளான நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.

Similar News

News January 26, 2026

திருவள்ளுர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377

2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500

3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090

4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098

5.முதியோருக்கான அவசர உதவி -1253

6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033

7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 26, 2026

திருத்தணி கோயிலுக்குச் செல்ல தடை!

image

திருத்தணி முருகன் கோவிலில் நேற்று(ஜன.25) பெய்த துாரல் மழையிலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், இன்று(ஜன.26) முதல் மூன்று நாட்களுக்கு ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும், வருகிற பிப்.1ஆம் தேதி தைப்பூசம் என்பதால், கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். எனவே, அன்று ஒரு நாள் ஆட்டோக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோயில் இணை ஆணையர் ரமணி தெரிவித்தார்.

News January 26, 2026

திருவள்ளூர் கலெக்டர் கொடி ஏற்றினார்!

image

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம் நாடு முழுக்க இன்று(ஜன.26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குடியரசு தினத்தையொட்டி இன்று காலை 8 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்

error: Content is protected !!