News February 4, 2026

திருவள்ளூரில் மின்சாரப் பிரச்னையா..?

image

திருவள்ளூர்,:பெரிய குப்பத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (பிப்.5), காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 வரை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். எனவே திருவள்ளூர் கோட்டத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மின்துறை சம்பந்தமான புகார்களை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 16, 2026

சிறு விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளை ஆட்சியர் ஆய்வு

image

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், பூவலம்பேடு ஊராட்சியில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ஆகிய துறைகள் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு வருகின்றது. முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகளை ஆட்சியர் மு.பிரதாப், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News February 16, 2026

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 676 மனுக்கள்!

image

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (பிப்.16) மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. நிலம் சம்பந்தமாக 47, கலைஞர் மகளிர் உரிமை தொகை சம்பந்தமாக 350, சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 35, வேலைவாய்ப்பு வேண்டி 27, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 22, இதர துறைகள் சார்பாக 195 என மொத்தம் 676 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தினார்.

News February 16, 2026

திருவள்ளூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

image

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!