News October 21, 2025
திருவள்ளூரில் மழை வெளுத்து வாங்கும்

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவள்ளூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டிற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 21, 2025
திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
News October 21, 2025
திருவள்ளூர்: வெடி விபத்தில் 4 பேர் பலி.. மேலும் ஒருவர் கைது

திருவள்ளூர் ஆவடி, பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைதான நிலையில், நாட்டு வெடி மொத்த வியாபாரி கோவிந்த ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டு வெடி வியாபாரி விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் நடந்து வருகிறது.
News October 21, 2025
திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.