News February 1, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

திருவள்ளூர் அடுத்த மொண்ணவேடு ராமதண்டலத்தைச் சேர்ந்த மல்லிகா (60), ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கடம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நேற்று(பிப்.1) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், முகமது நயிம் ஆகியோரை கைது செய்தனர்.
News February 2, 2026
திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 2, 2026
திருவள்ளூரில் 4 பேர் மீது குண்டாஸ்!

மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(32) தனது நண்பர்களான சுகுமார்(31), கேசவ மூர்த்தி(25) ஆகியோருடன் கடந்த ஜன.16ஆம் தேதி ஆந்திரா மாநிலம், கோனே நீர் வீழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் திரும்பினர். அப்போது கஞ்சா போதை கும்பலுடன் ஏற்பட்ட தகராறில், பார்த்திபன், சுகுமார் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ஜவகர்(24), வினோத்(36), ஜோதிஷ்(34), நீலகண்டன்(31) ஆகியோர் மீது குண்டாஸ் பாய்ந்தது.


