News February 22, 2026
திருவள்ளூரில் பரிதாப பலி!

திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30) . இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பிப்.10 வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த மணிகண்டன் கால் தவறி கீழே விழுந்தார். திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் நேற்று (பிப்.22) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 1, 2026
திருவள்ளூர்: கேஸ் புக்கிங் செய்ய புது அறிவிப்பு!

திருவள்ளூர் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் e-KYC மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE
News March 1, 2026
திருவள்ளூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News March 1, 2026
திருவள்ளூர்: திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

மாதவரம் தொகுதி, வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம், கொள்ளுமேடு KVS நகர் பகுதியில் நேற்று(பிப்.28) மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆரிக்கம்பேடு பா.ம.க-வின் மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வரும் ராஜசேகர், பா.ஜ.க. கட்சியின் நிர்வாகிகள் அமைப்பு சாரா தொழிலாளர் நலச்சங்க உறுப்பினர்கள் சுமார் 40 பேர் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் முன்னிலையில் இணைந்தனர்.


