News August 10, 2025
திருவள்ளூரில் நோய்களைத் தீர்க்கும் வீரராகவர்

திருவள்ளூரில் அமைந்துள்ள வைத்திய வீரராகவப் பெருமாள் கோயில் நோய்களைத் தீர்க்கும் சிறப்பு வாய்ந்த தலமாக கருதப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான வீரராகவப் பெருமாள், பக்தர்களின் நோய்களைத் தீர்க்கும் “வைத்தியர்” என்று அழைக்கப்படுகிறார். இங்கு வழங்கப்படும் நெய், பால் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் பிரசாதத்தை உட்கொண்டால், உடல்நலக் குறைபாடுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஷேர்!
Similar News
News August 10, 2025
திருவள்ளூர்: 10th முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

‘தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி’ வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நகையின் தரம், போலி நகைகளை அடையாளம் காணும் முறைகள் கற்றுத்தரப்படும். 10th முடித்தவர்கள் <
News August 10, 2025
திருவள்ளூரில் செல்ல வேண்டிய முக்கியமான இடங்கள்!

▶️ஸ்ரீவிஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்
▶️ஸ்ரீ வீரராகவஸ்வாமி திருக்கோயில்
▶️வடிவுடை அம்மன் உடனுறை தியாகராஜசுவாமி திருக்கோயில்
▶️பவானி அம்மன் திருக்கோயில், பெரியபாளையம்.
▶️அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி
▶️தேவி கருமாரி அம்மன் திருக்கோயில். இவை எல்லாம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான கோயில்களாகும். இதை ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!
News August 10, 2025
திருவள்ளூர்: கோயில் ஊழியர்களை தாக்கிய இளைஞர்கள்!

திருத்தணி முருகன் கோயிலுக்கு வடபழனியை சேர்ந்த இளங்கோ (22), ஸ்ரீராம் (24) ஆகியோர் தரிசனம் செய்ய வந்துள்ளனர். அப்போது, கோயில் ஊழியர்கள் பாலாஜி, ரமேஷ் தங்களுக்கு வேண்டியவர்களை மூலவர் சன்னிதி உள்ளே அனுப்பி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, இளங்கோ, ஸ்ரீராம் தங்களையும் உற்சவர் சன்னிதிக்குள் அனுமதிக்க வாக்குவாதம் செய்து அவர்களை தாக்கினர். இதுகுறித்து திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.