News January 30, 2026
திருவள்ளூரில் நாளை விடுமுறை இல்லை!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க நிலை, நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் நாளை(ஜன.30) முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். கடந்த டிச.4ஆம் தேதி மழையின் காரணமாக மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்ததால், அதனை ஈடு செய்யும் பொருட்டு நாளை பள்ளி முழு வேலை நாளாக செயல்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. (SHARE IT)
Similar News
News January 30, 2026
திருவள்ளூர்: உங்களிடம் டூவீலர், கார் உள்ளதா?

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <
News January 30, 2026
கொடியசைத்து வழி அனுப்பி வைத்த ஆட்சியர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 37-வது சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு விபத்து தடுப்பு தொடர்பாக பொது மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்பு கண்காட்சி பேருந்தினை பார்வையிட்டு, கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.
News January 30, 2026
திருவள்ளூர்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க


