News November 15, 2024

திருவள்ளூரில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகள்

image

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (நவ.16.) காக்களூர் துணை மின் நிலையம், திருமழிசை துணை மின் நிலையத்தில் மின் தடை செய்யப்பட உள்ளன. இதனால், காக்களுர் தொழிற்பேட்டை, புல்லரம்பாக்கம், செவ்வாய்பேட்டை, ஈக்காடு, பெரும்பாக்கம், திருப்பாச்சூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், திருமழிசை,வெள்ளவேடு, நேமம், மணம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்பட உள்ளன. 

Similar News

News March 4, 2026

திருவள்ளூர் கலெக்டர் அறிவித்தார்!

image

ஊத்துக்கோட்டை சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட், திருத்தணி – அரக்கோணம் சாலையில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் இன்று(மார்ச் 4) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளது. வரும் மார்ச் 30ஆம் தேதி முதல் அனைத்து பேருந்துகளும் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மட்டுமே இயக்கப்படுமென மாவட்ட கலெக்டர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

கும்மிடிப்பூண்டி அருகே தூக்கிட்டு தற்கொலை!

image

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த்(26). தனியார் தொழிற்சாலையில் பணி புரியும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், நேற்று(மார்ச் 3) கிராமத்தில் உள்ள மேல் நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறிய பிரசாந்த், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News March 4, 2026

திருவள்ளூர் இரவு ரோந்து காவல் விவரம்!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!