News January 14, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், வெடியங்காடு கிராமம், மதுரா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள்(75). இவர் பெங்களூரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், பொங்கல் பண்டிகையைக் கொண்டாட நேற்று(ஜன.13) அதிகாலை ஊருக்கு வந்த அவர், வயல் வெளியில் நடந்த போது, மின் கம்பியை மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News January 24, 2026
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

திருவள்ளூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <
News January 24, 2026
திருவள்ளூர்: பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய வாலிபர்!

திருவள்ளூர்: போரூர் பகுதியில் வசிக்கும் 35 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து தனியாக வாசித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 12ஆம் தேதி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வந்துள்ளது. இது குறித்த அவர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் காரம்பாக்கத்தை சேர்ந்த சேகர் என்பவரை போலீசார் நேற்று(ஜன.23) கைது செய்தனர்.
News January 24, 2026
திருவள்ளூர்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்


