News January 30, 2026

திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

image

பொன்னேரி அடுத்த தொட்டிமேடு கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(60). மீனவரான இவர் பழவேற்காடு ஏரியில் மீன் பிடித்து விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்ற ராஜேந்திரன் ஏரியில் மூழ்கி பலியானார். அவரது உடலை மீட்ட திருப்பாலைவனம் போலீசார், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News

News January 31, 2026

திருவள்ளூர்; ரயில்வேயில் 22,195 காலியிடங்கள்! APPLY

image

திருவள்ளூர் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <>இங்கு <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.18,000 வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News January 31, 2026

திருவள்ளூரில் நாளை டாஸ்மாக் இயங்காது!

image

வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தையொட்டி, நாளை(பிப்.1) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதாப் அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்படும் மதுபான சில்லறை கடைகள் மற்றும் உரிம ஸ்தலங்கள் மூடப்படும் என்றும், மீறி திறந்தால் பணியாளர்கள் மற்றும் உரிமைதாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News January 31, 2026

திருவள்ளூரில் இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!