News June 4, 2024
திருவள்ளூரில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை

தமிழகம் முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தொகுதியில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 26,206 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார். தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி 11,701 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக வேட்பாளர் பாலகணபதி 10,012 வாக்குகளுடன் 3ஆவது இடத்திலும் உள்ளனர்.
Similar News
News September 21, 2025
விஜய் பேச்சு அனைத்தும் பொய்: ஆளூர் ஷாநவாஸ்

நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 21, 2025
USA-வில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

USA-வின் H-1B விசா பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், USA-வில் அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண் அறிவித்துள்ளது. அவசர உதவிகள் தேவைப்பட்டால் மட்டும் +12025509931 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் தகவல்களை விசாரிக்க ஃபோன் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 21, 2025
தவெக கூட்டணிக்கு அச்சாரம் போடுகிறாரா டிடிவி?

NDA-வில் இருந்து வெளியேறிய தினகரன், தவெக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. இந்நிலையில், 2006 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கத்தை விட வரும் தேர்தலில் விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்படி இவர், விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளது, தவெகவுடனான கூட்டணி அச்சாரமாக பார்க்கப்படுகிறது. உங்கள் கருத்து?