News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
Similar News
News December 12, 2025
திருவள்ளூரில் கல்லூரி மாணவர் பரிதாப பலி!

செங்குன்றம் அடுத்த பாலவாயல் பகுதியைச் சார்ந்த நீரஜ்(18) கல்லூரியில் பி.காம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், தமது நண்பர்களுடன் நேற்று(டிச.11) மாலை இருசக்கர வாகனத்தில், மாதவரம் நோக்கி சென்றபோது செங்குன்றம் புறவழிச் சாலையில் சாலையோரம் பழுதாகி நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்தில் அவர் சம்பவ இடத்திலே பலியானார்.
News December 12, 2025
திருவள்ளூர்: 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

திருவள்ளூர்: மூலக்கடையில் 15 வயது சிறுமி, நேற்று (டிச.11) புழல் பகுதி உறவினர் வீடு சென்று தன் வீடு செல்ல புழலில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது, அங்கு வந்த லாரி மூலக்கடை செல்வதாக டிரைவர் கூறவே நம்பி சிறுமி லாரியில் ஏறினார். சிறிது தூரத்தில் லாரியை நிறுத்தி சிறுமியை லாரியில் அந்த டிரைவர் பாலியல் வன்முறை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில், டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
News December 12, 2025
திருவள்ளூர்: மணமகளுக்கு ரூ.25,000 சூப்பர் திட்டம்!

திருவள்ளூர் மக்களே.. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவுத் திருமண உதவித் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு படித்த மணமகளுக்கு ரூ.25,000 நிதியுதவி மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெற்றோர் தங்கள் மகளுக்கு திருமணம் நடத்தும் பொழுது மிகுந்த உதவியாக அமைகிறது. மேலும் மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது இ-சேவை மையம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.


