News January 17, 2026

திருவள்ளூரில் இரவு ரோந்து காவல்துறையினர் விவரம்

image

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

Similar News

News February 3, 2026

திருவள்ளூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.

1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.

2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க

3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.

4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.

இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க!

News February 3, 2026

புழல் அருகே பரிதாப பலி!

image

திருவள்ளூர்: செங்குன்றத்தை அடுத்த சோழவரம் குமரன் நகர் 5ஆவது தெருவைச் சேர்ந்தவர் குகன்(21). இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன் தினம் இரவு பணியை முடித்து இவர் பைக்கில் திரும்பிய போது, ஜி.என்.டி சாலையில் வந்த தனியார் பஸ் இவர் மீது மோதியதில், படுகாயமடைந்தார். பின்னர், சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்ப்றி நேற்று(பிப்.2) பரிதாபமாக உயிரிழந்தார்.

News February 3, 2026

திருவள்ளூரில் துடித்துடித்து பலி!

image

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெடியங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி(38). இவரது கணவர் தனபால்(53). இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் விசைத் தறிகள் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று(பிப்.2) விசைத்தறிகளை இயக்க சென்ற ஜோதி, மின்சாரம் தாக்கி மயங்கினார். அவரது கணவர் உடனே அவரை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அதில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!