News November 24, 2025
திருவள்ளூரில் இன்று இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவள்ளூர் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (23.11.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதிசெய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கை, மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.
Similar News
News November 24, 2025
திருவள்ளூர்: கலப்பு திருமணத்திற்கு ரூ.20,000!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., கலப்பு திருமணம் செய்திருந்தால் அவர்களுக்கு அரசின் சார்பாக உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதாவது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.20,000, BC,MBC வகுப்பை சேர்ந்தவரை திருமணம் செய்பவருக்கு ரூ.10,000 உதவித்தொகையும் வழங்கப்படும். இதற்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகளுக்குள் மாவட்ட சமூக நல அலுவல்கத்தில் விண்ணப்பிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!
News November 24, 2025
திருவள்ளூர்: 10ஆவது படித்தால் உளவுத்துறை வேலை!

திருவள்ளூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 362 ‘Multi Tasking staff; பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு மாதம் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. டிச.14ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 24, 2025
திருவள்ளூர்: ரீல்ஸ் செய்த வாலிபர் கைது!

பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், பட்டா கத்தியுடன் ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டிருந்த இளைஞர் ராஜதுரை (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். பள்ளிப்பட்டு தாலுகா நொச்சி தலையாரி காலனியைச் சேர்ந்த இவர், பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கத்தியுடன் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், விரைந்து வந்த பொதட்டூர் எஸ்.ஐ. தலைமையிலான போலீசார் அவரை கைது செய்தனர்.


