News May 4, 2024
திருவள்ளூரில் ஆரஞ்சு அலர்ட்

திருவள்ளூர் மாவட்டத்தில் காற்றின் போக்கு காரணமாக கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடல் அலைகள் 1.5 மீ உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Similar News
News February 2, 2026
திருவள்ளூர்: திடீர்னு பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

திருவள்ளூர் மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News February 2, 2026
கும்மிடிப்பூண்டியில் அதிரடி கைது!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே நேற்று(பிப்.1) போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, ரூ.3 லட்சம் மதிப்பிலான மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மணிகண்டன், முகமது நயிம் ஆகியோரை கைது செய்தனர்.
News February 2, 2026
திருவள்ளூர்: இனி Whats app-ல் ஆதார் அட்டை!

திருவள்ளூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <


