News September 19, 2025

திருவள்ளூரில் அதிரடி மாற்றம்…SP போட்ட உத்தரவு!

image

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒன்பது சிறப்பு சப் – இன்ஸ்பெக்டர்கள் உட்பட 58 பேரை இடமாற்றம் செய்து மாவட்ட எஸ்.பி. விவேகானந்தாசுக்லா உத்தரவிட்டுள்ளார். ஒன்பது சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள், நான்கு பெண் காவலர்கள் உட்பட 22 காவலர்கள், 20 தலைமைக்காவலர்கள், ஏழு முதல்நிலை காவலர்கள் என, 58 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News September 19, 2025

திருவள்ளூர்: மின்னல் தாக்கிய அதிர்ச்சியில் மூதாட்டி பலி

image

ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் குரு வயல் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சம்மந்தன். இவரது மனைவி மல்லிகா(60). இருவரும் தங்களது விவசாய நிலத்தில் சுற்றிப் பார்வையிட்டு நேற்று (செப்டம்பர் 18) மாலை வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மாலை கனமழை பெய்து மின்னல் தாக்கியதில் மூதாட்டி மல்லிகா சம்பவ இடத்திலேயே அதிர்ச்சியில் பலியானார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 19, 2025

திருவள்ளூர்: பருவமழைக்கு முன்பே நிரம்பும் ஏரிகள்…!

image

திருவள்ளூர், வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே, புழல் ஏரி நிரம்பும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை பணிகளில் நீர்வளத்துறையினர் சுணக்கமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஏரி வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இது, 3.30 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. தற்போது, புழல் ஏரியில், 2.99 டி.எம்.சி., அளவிற்கு நீர் இருப்பு உள்ளது.

News September 19, 2025

திருவள்ளூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

திருவள்ளூர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!