News August 4, 2024
திருவள்ளூரில் அதிகபட்சமாக 4 செ.மீ மழை கொட்டி தீர்த்தது

திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் நேற்று மாலை திடீரென காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஆர்கே பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, செங்குன்றம் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூரில் 4 சென்டிமீட்டர் மழை பெய்தது. இதனால் திருவள்ளூரில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.
Similar News
News January 26, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

பள்ளிப்பட்டு தாலுகா கீளப்பூடி கிராமம் ராமர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கிரி(39). டிரைவரான இவர், கடந்த 20ஆம் தேதி பைக்கில் பொதட்டூர் பேட்டை பஜார் தெருவில் சென்றார். அங்கிருந்து தனது கிராமத்திற்கு திரும்பிய போது, எதிரே வந்த டிராக்டர் மோதியதில் தூக்கி விசப்பட்டு, படுகாயமடைந்தார் . இதையடுத்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி கடந்த ஜன.23 உயிரிழந்தார்.
News January 26, 2026
திருவள்ளூரில் மின்சார ரயில்கள் இயங்காது!

திருவள்ளூர்: பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.27) சென்ட்ரலிலிருந்து காலை 5:40, சூலூர்பேட்டையிலிருந்து காலை 7:50, மதியம் 12:35, நெல்லூரிலிருந்து காலை 10:20, ஆவடியிலிருந்து காலை 4:25 ஆகிய நேரங்களில் கிளம்பும் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலிலிருந்து காலை 4:15, 5:00, சூலூர்பேட்டையிலிருந்து காலை 6.45, 7.25 ரயிலும் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகின்றன. இந்தத் தகவலை உடனே SHARE!
News January 26, 2026
திருவள்ளூரில் விஷம் குடித்து தற்கொலை!

பள்ளிப்பட்டு அருகே வசிப்பவர் ராஜேந்திரன்(55). இவரது மகன் குகன், ராணுவத்தில் பணி புரிந்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத் தகராறில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதார். இதனால், மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன், நேற்று முன் தினம், வீட்டில் யாரும் இல்லாத நேரம் விஷம் அருந்தினார். இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


