News April 16, 2025
திருவள்ளுவரில் மீன் பிடி தடைக் காலம் அமலுக்கு வந்தது

தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் ஜீன்14 வரை 61நாட்கள் மீன்களின் இனப்பெருக்கத்திற்கு மீன்பிடி தடை செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 16 கடலோர மாவட்டங்களில் உள்ள இந்த தடை அமலுக்கு வந்தது. இதனையொட்டி இந்த காலத்தில் தமிழக அரசு தரும் நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Similar News
News January 28, 2026
திருவள்ளூர்: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

திருவள்ளூர் மக்களே.., 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
திருவள்ளூர்: இனி பட்டா, சிட்டா அனைத்தும் Whatsapp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp -ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க..!
News January 28, 2026
திருவள்ளூரில் அதிரடி கைது!

மணவாளநகர்போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் குட்கா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மணவாளநகர் போலீசார் பட்டரைப் பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். இதில், ராமதாஸ் தெருவைச் சேர்ந்த ஏழுமலையிடம்(54) 128 கிலோ குட்கா, வெங்கடேசன்(47) என்பவரிடம் 128 கிலோ குட்கா என பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


