News October 4, 2025
திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அளவு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 3-ம் தேதி காலை முதல் இன்று காலை வரை 597 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. திருவண்ணாமலை -19 மிமீ, கீழ்பென்னாத்தூர் – 98 மிமீ, தண்டராம்பட்டு – 72.2 மிமீ, செங்கம் – 83.6 மிமீ, கலசப்பாக்கம் – 74.2 மிமீ, ஜமுனாமரத்தூர் – 63.8 மிமீ, போளூர் – 72 மிமீ, சேத்துப்பட்டு – 29.32 மிமீ, ஆரணி -78 மிமீ, வந்தவாசி -7 மிமீ என்ற அளவில் மழை பதிவாகியுள்ளது.
Similar News
News April 3, 2026
ஆரணி அருகே பரிதாப பலி!

ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசிலாமணி விவசாயி. இவர் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள படிக்கட்டில் ஏறி இறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை உயர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் விசாரிக்கின்றனர்.
News April 3, 2026
மு.பெ.கிரி வெற்றிபெற வேண்டி அழகு குத்திய திமுக நிர்வாகி

மதச்சார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி சார்பில் செங்கம் சட்டமன்ற வேட்பாளராக மு.பெ.கிரி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற வேண்டி கீழ்வணக்கம்பாடியில் பங்குனி உத்திர திருவிழாவில், திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் அர்ஜுன் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார். இந்த நிகழ்வின் போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
News April 2, 2026
FLASH – தி.மலை: வேட்பாளர்களை அறிவித்த ராமதாஸ்!

தமிழகத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அந்த வகையில், ராமதாஸ், அஇபுதமமுக-வுடன் தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதில், தி.மலை மாவட்டம் செங்கம் – குயிலம் செல்வம், கலசப்பாக்கம் – ம.சுமன், போளூர்-ரா.மணிகண்டன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும்னு கமெண்டில் சொல்லுங்க.


