News August 11, 2025
திருவண்ணாமலை : நாளை கல்லூரி விடுமுறை!

தி.மலை அரசு கலைக் கல்லூரியில் நாளை (ஆக.12) முதுகலை மற்றும் முதுஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு சேர்க்கை மாணாக்கர் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் UG & PG (முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி) வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சுழற்சி ஆசிரியப் பணியாளர்களுக்கும் வேலை நேரம் காலை 09.00 முதல். மாலை 04.00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 12, 2025
தி.மலை: 8வது போதும் கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

தி.மலை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT
News August 12, 2025
தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.12) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் விவரங்களை மேலே உள்ள படத்தை காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News August 12, 2025
கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி

திருவண்ணாமலை காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் பணியாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மூவரையும் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.