News December 13, 2025

திருவண்ணாமலை: ஓசி பீடி குடுக்க மறுத்தவருக்கு பிளேடால் வெட்டு

image

ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கல்யாணசுந்தரம் அருணகிரிசத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்திருந்தார். அப்போது, சரவணயுவராஜ் பீடி கேட்டுள்ளார். கல்யாணசுந்தரம் ‘பீடி இல்லை’ என்று மறுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணயுவராஜ், தான் வைத்திருந்த பிளேடால் கல்யாணசுந்தரத்தின் முதுகில் வெட்டியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News December 13, 2025

தி.மலை: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர்<> nlm.udyamimitra.in<<>> என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 13, 2025

தி.மலை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

image

தி.மலை மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News December 13, 2025

தி.மலை: முதலாளி வீட்டில் கைவரிசை காட்டியவர் கைது!

image

வந்தவாசி அடுத்த சென்னாவரம் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக் சசிகுமார் வீட்டில் வைத்திருந்த மகனின் திருமணத்திற்கான 13½ பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். திடிரென்று நகை காணாமல் போனதால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சந்தேகத்தின் பெயரில் கடை ஊழியரும், சசிகுமார் வீட்டில் தங்கி இருந்தவருமான அருண்குமாரை போலீசார் விசாரித்தனர்.இந்த விசாரணையில் அவர் நகையை திருடியது உறுதியானதால் அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!