News December 29, 2024
திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், இலவச தங்கும் வசதி,பயிற்சிக் கட்டணத்துடன் தாட்கோ மூலம் அளிக்கப்படும் சர்வதேச விமானப் போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளை பெற விரும்பும் ஆதிதிராவிடா் & பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தி.மலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தகுதியானோர் தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
தி.மலை மக்களே இந்த அறிகுறி உங்களுக்கு இருக்கா

கடந்த ஆண்டு 30 பேர் தி.மலை மாவட்டத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 2000 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டு, 8 பேருக்கு தொழுநோய் உறுதி செய்யபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர தொழுநோய் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழுநோயை பற்றி தெரிந்து கொள்ள இங்கு <<17469663>>கிளிக்<<>> பண்ணுங்க.
News August 21, 2025
தி.மலை: தொழுநோய் அறிகுறிகள்

தோலில் நிறமாற்றம், உணர்ச்சியற்ற தேமல், தோல் தடித்து காணப்படுதல், தோல் பளபளப்பாக இருத்தல் அல்லது எண்ணெய் பூசியது போல் இருத்தல் போன்றவை இதன் அறிகுறிகள். அறிகுறிகள் தென்பட்டால் பயம் கொள்ளாமல் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகள் மூலம் 6 மாதம் முதல் 1 வருடம் வரை சிகிச்சை பெற்று குணமடையலாம். *ஷேர் பண்ணுங்க. முன்னதாகவே தற்காத்து கொள்வது சால சிறந்தது*
News August 21, 2025
தி.மலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (ஆகஸ்ட் 21) நடைபெறும் இடங்கள் அதன் விவரம் மேலே உள்ள படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை, வாரிசு, வருமானம், இருப்பிடம், சாதி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களுக்கு மனு அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம். மேலும் இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.