News March 23, 2024

திருவண்ணாமலை அருகே சோகம்

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஓசூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, விளாப்பாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவர்களுக்கு  திருமணம் ஆன நிலையில் குழந்தைகள் இல்லாததால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சந்தியா நேற்று மாலை  வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

தி.மலை: டிகிரி போதும்; LICல் OFFICER வேலை!

image

LICல் assistant administrative officer (AAO) பணிக்கான 350 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். இதற்கு 21- 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு மாதம் ரூ.88635 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து செப்.8 க்குள் விண்ணப்பிக்கலாம். அருமையான பணி வாய்ப்பு. டிகிரி முடித்த அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 17, 2025

தி.மலை மாவட்ட இணையதளம் முடங்கியது!

image

தி.மலை மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ <>இணையதளம்<<>> முடங்கியது. மாவட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வழங்கி வந்த அரசு இணையதளம், கடந்த சில நாட்களாக வேலை செய்வதில்லை. மாவட்டத்தின் வரலாறு, சிறப்புகள், துறை சார்ந்த விவரங்கள், வேலைவாய்ப்பு, பொறுப்பு அதிகாரிகள் என அனைத்துமே அதில் இருக்கும். ஆனால், தற்போது அது வேலை செய்யாததால், பலர் அவதி அடைந்து வருகின்றனர். காரணம் தெரியவில்லை!. ஷேர் பண்ணுங்க.

News August 17, 2025

திருவண்ணாமலை இரவு ரோந்து அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இரவு 16/08/2025 10 மணி முதல் 17/08/2025 காலை 06 மணி வரை இரவு ரோந்துக்கு தாலுக்கா வாரியாக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் மற்றும் தொலைபேசி எண்கள் மேலே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அவசர காலத்தில் உங்கள் தாலுக்கா அதிகாரி அழைக்கலாம் மற்றும் 100 அழைக்கலாம் என மாவட்ட காவல் அலுவலகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது…

error: Content is protected !!