News October 30, 2025
திருவண்ணாமலையில் TNUSRB-PC தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள்

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் TNUSRB-PC தேர்வுக்கான கட்டணமில்லா மாதிரித் தேர்வுகள் நடைபெற உள்ளது. அக்டோபர் 31 முதல் நவம்பர் 5 வரை காலை 10 மணி முதல் 1 மணி வரை நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ளோர் அக்டோபர் 30 மதியம் 2 மணிக்குள் கூகுள் படிவம் https://forms.gle/k1Xt2LAwQqe2pnHB8 மூலம் பதிவு செய்யலாம்.
Similar News
News November 1, 2025
திருவண்ணாமலை: வீடுகளின் மீது அடுத்தடுத்து கற்கள் வீச்சு!

செய்யாரில் டாக்டர் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோவில், தெருவில் நேற்று இரவு சுமார் 9:30 மணி அளவில் 8 வீடுகள் மீது அடுத்தடுத்து கற்கள் வீசப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போதும் கற்கள் தொடர்ந்து விழுந்தன. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு நிலவியது.
News November 1, 2025
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் – எம்.பி. பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (நவ.01) “நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்” சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தரணிவேந்தன் அவர்கள் கலந்து கொண்டார். அவர், பொதுமக்களுடன் கலந்துரையாடி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பல்வேறு அரசு துறைகள் இணைந்து சுகாதார பரிசோதனை நடைபெற்றது.
News November 1, 2025
தி.மலை :குழந்தை வரம் தரும் புத்திரகாமேட்டீசுவரர்

தி.மலை மாவட்டம் ஆரணியில் புத்திரகாமேட்டீசுவரர் கோவில். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இங்கு வழிபட விரைவில் அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது பகதர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதற்கு 7 திங்கட் கிழமை விரதமிருக்க வேண்டும். விரதம் துவங்கும் நாளன்று மதியம், ஒரு குழந்தைக்கு, நெய் சோறு தானமாக கொடுத்து அதன் பின் சாப்பிட வேண்டும். இதே போன்று 7 நாட்களும் செய்யவேண்டும். ஷேர் பண்ணுங்க.


