News April 25, 2024
திருவண்ணாமலையில் நெரிசல்

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம்.அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் இன்று அதிகாலை வரை பல லட்சம் பக்தர்கள் கூட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் இரண்டரை மணி நேரமாக வாகனங்கள் இயங்காமல் ஸ்தம்பித்தது.
Similar News
News November 19, 2025
தி.மலை: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

தி.மலை மக்களே, வாக்காளர் பட்டியல் விபரங்களில் உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 19, 2025
தி.மலை: தீபத்தன்று மலையேற அனுமதி உண்டா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் மலையின் உறுதித்தன்மை குறைந்துவிட்டது என்று ஐஐடி நிபுணர்கள் ஆய்வு செய்து கூறியதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். கார்த்தை தீபத் திருநாளன்று மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்த பின்னரே மலை மீது பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் கார்த்தை தீபத் திருநாளை ஓட்டி முன்னேற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
News November 19, 2025
தி.மலை: தலை நசுங்கி இளைஞர் பலி!

ஆரணி வட்டம், அரியப்பாடி, ஆரணி- சிறுமூர் சாலை பகுதியில், தனியார் பேருந்து ஒன்று சிறுமூர் சென்று கொண்டிருந்தது. அப்போது, அக்ராபாளையத்தை சேர்ந்த சக்திவேல் (16) என்பவர் ஒட்டி வந்த பைக், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்றவர் ஆரணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


