News September 30, 2025
திருவண்ணாமலையில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் இன்று (செப்.30) வெளியிட்ட செய்திக் குறிப்பில், அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடிகள், அரசு மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் என அனைத்தும் அன்று மூடப்பட வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 6, 2026
தி.மலையில் லஞ்சம் கேட்டால் ‘கம்பி’ நிச்சயம்

தற்போதைய சூழலில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த இந்த எண்களை தெரிஞ்சிக்கோங்க. தி.மலை DSP-04175-232619, வடக்குமண்டல பிரிவு எஸ்.பி-044-22321090 / 22321085, லஞ்ச ஒழிப்பு கட்டுப்பாட்டு அறை-044-22321090/22321085, TOLL FREE NO-1064, தி.மலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்-9894599260. *யாரேனும் லஞ்சம் வாங்கினால் உடனடியாக CALL பண்ணவும். உங்கள் விவரங்கள் ரகசியம் காக்கப்படும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*
News March 6, 2026
தி.மலையின் ‘ட்விஸ்ட்’ தொகுதி

போளூரில் கடந்த 2021 தேர்தலில் திமுக-வின் கே.வி. சேகரனை விட சுமார் 9,725 வாக்குகள் அதிகம் பெற்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்றார். போளூர் இழுபறி தொகுதியாகவே பார்க்கப்படுகிறது, ஏனெனில் ஒரு முறை திமுக வென்றால் மறுமுறை அதிமுக வெல்லும் மாறி மாறி வெற்றி பெரும் தொகுதியாக இது உள்ளது. இந்நிலையில், மீண்டும் இந்த சூரியனை உதிக்க செய்ய கட்சியினர் வேலை செய்து வருகின்றனர். இந்த முறை போளூர் யாருக்கு?
News March 6, 2026
தி.மலை: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் (05.03.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


